Breaking News

பணி நிரவலால் எட்டாயிரம் ஆசிரியர்களின் பதவி உயர்வு தாமதமாகியுள்ளது

        அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 8000 இடைநிலை ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பதவிஉயர்வு அளிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது, என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் அவர்கள் தெரிவித்தார். தமிழகத்தில் 2003 ம் ஆண்டு 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்தனர். இதன் பின் அரசு பள்ளிகளில் இனிமேல் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இல்லை என முடிவு செய்யப்பட்டது.

     எனவே, 2004ல் 57,179 பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இவர்கள் 2006 ம் ஆண்டு காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர். இதில் 40,000 பட்டதாரி ஆசிரியர் பயனடைந்தனர். அப்போது 21 ,000   இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அடுத்தடுத்த ஆண்டில் மொத்தம் 13 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் 8,000   பேருக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. அதற்கான முன்னுரிமை பட்டியலும் வெளியிடப்படவில்லை. இது கல்விக்கொள்கைக்கு எதிரானது. தற்போது எட்டாயிரம் பேரில் பலர் பணிநிரவலில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு பணி நிரவலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கூறினார்.



No comments