Breaking News

இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க தடை - மாசு கட்டுப்பட்டு வாரியம் நடவடிக்கை

       தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படுவதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது .'சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக, தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும் என்று 2018 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 2018 தீபாவளி அன்று, தமிழகத்தில், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி; மாலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை என, மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க, அரசு அனுமதி அளித்தது.

        உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, பட்டாசு வெடித்ததாக, ஆயிரக்கணக்கானோர் மீது, தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தாண்டு தீபாவளி 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரம் மட்டுமே தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க, அனுமதி வழங்கப்படும். அனுமதி மீறி பட்டாசு வெடிப்போர் மீது, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments