Breaking News

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

    அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.16 ஆயிரம் கோடி செலவாகும். இதுதவிர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் ஆஷா தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


No comments