Breaking News

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

    வடகிழக்கு பருவமழை இந்த மாதம் ஆரம்பிக்கவிருக்கிறது. பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படுகிறது எனவே, பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. கன மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, அவ்வப்போது விடுமுறை விடப்படும்.இந்தாண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

      பள்ளி இரண்டாம் பருவ தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்பட இருக்கும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.


No comments