Breaking News

வெகு தூரத்தில் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள், கவலையில் தேர்வர்கள்

     முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள் மிக அதிக துாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுவோர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.27 முதல் 29 வரை ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தில் தேர்வு மையங்கள் குறித்து தேர்வர்களிடம் மூன்று விருப்ப மையங்கள் கேட்கப்பட்டன.இதில் பலர் முதல் தேர்வாக தங்களது சொந்த மாவட்டத்தை தேர்ந்தெடுத்தனர், அடுத்து அருகில் உள்ள மாவட்டங்களை பலர் தேர்வு செய்தனர். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதனால் தேர்வர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சொந்த ஊர்களில் இருந்து சென்று வர மூன்று நாட்கள் ஆகும் என்பதால் தேர்வர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். இதுகுறித்து டி.ஆர்.பி., அலுவலகத்தில் தேர்வர்கள் கேட்டபோது, Online தேர்வு என்பதால் சென்னை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில்தான் தேர்வெழுதும் வசதி உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மாவட்ட தேர்வர்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்ற தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


No comments