Breaking News

இனி 5 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் தேர்வு முடிவுகளை கொண்டு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல். மூன்று ஆண்டு வரை அவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு. ஏற்கனவே மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதனை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. எனவே தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.


No comments