Breaking News

ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ? - மத்திய அரசு விளக்கம்


    நேற்று காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவானது மேலும் மே 3 வரை நீட்டிக்கும் என அறிவித்தார். மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் சில தளர்வுகள் அளிக்கப்படும் என கூறியிருந்தார்.
  • அதன்படி, ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
  • கூரியர்,  ஆன்லைன் வணிகம் நிறுவனங்கள் இயங்க அனுமதி.
  •  ஐ.டி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.
  • ஏப்ரல் 20 ம் தேதி முதல்;100 வேலை நாள் திட்டத்துக்கு அனுமதி- மத்திய அரசு
  • விவசாயம், தோட்டக்கலை, விவசாய மண்டிகள், பன்னைத்தொழிலுக்கு அனுமதி
  • தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன்,மெக்கானிக் போன்றோர் வேலை செய்யலாம்.
  • நகரத்துக்கு வெளியே இருக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு
  • சமூக இடைவெளி விட்டு பணிகளை மேற்கொள்ளலாம்
  • மாவட்ட, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் சேவைகளுக்கு  மே 3 ம் தேதி வரை தடை தொடரும்.
  • லாரி பட்டறைகள் , விவசாய இயந்திர பட்டறை, நெடுஞ்சாலை தாபா, உர விற்பனை கடைகள், மீன்பிடித்தல் மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு
  • பொது இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் முககவசம் அனிவது கட்டாயம்
  • பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்.
  • கல்வி நிலையங்கள், பயிற்சி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், திரையரங்குகள், மால் போன்றவை இயங்க தடை தொடரும்- மத்திய அரசு
  • டாக்சி, ஆட்டோ இயங்க அனுமதியில்லை
  • கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தளர்வுகள் பொருந்தாது என மத்திய அரசு அறிவிப்பு
  • மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்
  • இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

No comments