Breaking News

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

     தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

   இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘உயர்கல்விக்கு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் அவசியம். எனவே, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு முடிவடையும் நாளான மே 3 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும். தேர்வை ரத்து செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை’ என்று அமைச்சர் தெரிவித்தார்.


No comments