Breaking News

புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் அரசாணையை வெளியிட்டது அரசு

         மத்திய அரசு ஊழியர் எவரேனும் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளாவது பணியாற்றி இருந்தால் மட்டுமே, அவருடைய குடும்பத்தினருக்கு, ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய ஓய்வூதிய நடைமுறை, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.


No comments