Breaking News

சோளத்தின் மருத்துவ பயன்கள்


சோளம் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். இத்தகைய சோளத்தை பலவாறு நாம் சாப்பிடுவோம். அதில் சிலர் வேக வைத்து சாப்பிடுவர். இன்னும் சிலர் நெருப்பில் சுட்டு எலுமிச்சை மற்றும் மிளகாய் தூள், உப்பு தேய்த்து சாப்பிடுவர். இது அற்புமான சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

இருப்பினும், இந்த ஆரோக்கியமான உணவுப் பொருளால் ஒரு பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. அதுவும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், பெரும் அவஸ்தைப்பட நேரிடும். ஆயுர்வேத நிபுணரான டாக்டர் அசுதோஷ் கவுதம், சோளம் சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், அது பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும் என கூறுகிறார்.

தண்ணீர் குடித்தால் ஏன் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுகிறது?

சோளம் சாப்பிடும் பலரும், அதை சாப்பிட்ட பின் நீர் பருகுவதால் வாய்வுத் தொல்லை மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திப்பதாக கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், சோளத்தை சாப்பிட்ட பின் நீரைப் பருகுவதால், அது செரிமான செயல்பாட்டை பெரும் இடையூறை ஏற்படுத்துமாம். சோளத்தில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் உள்ளது மற்றும் உடனே நீரைக் குடித்தால், வயிற்றில் வாய்வு உற்பத்தி அதிகமாகி, அதன் விளைவாக வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.

ஆகவே சோளம் சாப்பிட்டு உங்களுக்கு வயிறு வலிக்கிறது என்றால், அதற்கு காரணம் சோளம் அல்ல. நீங்கள் குடித்த நீர் தான்.

எவ்வளவு இடைவெளி தேவை?


சோளம் சாப்பிட்டு எவ்வித வயிற்று பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோளம் சாப்பிட்டு குறைந்தது 45 நிமிடம் இடைவெளி விட வேண்டியது அவசியம் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.

சோளத்தை எவ்வாறு சாப்பிடுவது சிறந்தது?

சோளத்தை எப்படி சாப்பிடுவது நல்லது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இத்தகைய கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம். பொதுவாக சோளத்தை நெருப்பில் வாட்டி, எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிளகாய் தூள் மற்றும் உப்பு கலவையில் தொட்டு, சோளத்தின் மீது தடவி சாப்பிடுவதே சிறந்தது.

சோளத்தை ஏன் எலுமிச்சை சேர்த்து உண்ண வேண்டும்?

சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்பதனால், செரிமான செயல்பாடு தங்கு தடையின்றி சிறப்பாகவும், மென்மையாகவும் நடைபெறும். பொதுவாக மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருக்கும். ஆகவே சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்ணும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகி, நோய்களின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.

பிரஷ்ஷாக சாப்பிடுவதே சிறந்தது

சோளத்தை எப்போது வாங்கினாலும், உடனே அதை சமைத்து சாப்பிட வேண்டும். சோளத்தின் முழுமையான சத்துக்களையும் பெற வேண்டுமானால், அதை நற்பதமாக இருக்கும் போதே சாப்பிடுவதே நல்லது. அதை விட்டு, பல மணிநேரங்களாக வைத்து, பின் சாப்பிட்டால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

சோளத்தின் மருத்துவ பயன்கள்

  • மக்கா சோளம் உடலுக்கு வலு கொடுக்க கூடியது. உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
  • உடலில் இருக்கும் கெட்ட உப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
  • நீரழிவு நோயால் பாதிக்க பட்டவர்கள் மக்கா சோளத்தை தினம் சாப்பிட பிரச்சனை தீர்ந்து நலம் பெறலாம்.
  • இதில் இருக்கும் புரத சத்து, நார் சத்துக்கள் அனைத்து மலச்சிக்கல் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வு.
  • ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், தலை சுத்தல் ஆகியவற்றிக்கு இதில் இருக்கும் புரதம் உதவுகிறது.
  • உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும் தன்மை கொண்டதே சோளம்.
  • சோளத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைக்க வேண்டும் எண்ணுவோர் தோசை, புட்டு என செய்து சாப்பிடலாம்.

No comments